வரம் வேண்டி

Photo by Patrick Shaun on Unsplash

நிஜங்கள் தேட, நிமிடங்கள் ஒட,

உன் விரல்கள் கோர்த்து,

உன்னில் கரைந்திடவே,

என் கண்கள் கனா கண்டனவே !

நிழல்கள் மறைய, கண்கள் நிறைய,

உன் நினைவுகள் சேர்த்து,

உன்னுடன் வாழ்ந்திடவே,

என் கண்கள் கனா கண்டனவே !

கைகள் இணைத்து, அருகில் இழுத்து,

என் மார்போடு உன்னை அனைத்து,

காலம் நின்றிடவே,

என் கண்கள் கனா கண்டனவே !

கனவுகளோ ஆயிரம்; ஆயினும்,

நான் காண்பது உன்னை மட்டுமே !

ஏக்கங்களோ ஆயிரம்; ஆயினும்,

நான் ஏங்குவது உனக்காக மட்டுமே !

வண்ணம் இல்லா என் கனாக்களுக்கு,

வர்ணம் பூசிட நீ இருப்பாயோ ?

இன்றும், என்றும் என்னுடன் வாழ்ந்திடவே,

வரம் ஒன்று நீ தருவாயோ ?

~ செல்வ குமார் ஆறுமுகபாண்டியன்

--

--