வரம் வேண்டி
May 16, 2022
நிஜங்கள் தேட, நிமிடங்கள் ஒட,
உன் விரல்கள் கோர்த்து,
உன்னில் கரைந்திடவே,
என் கண்கள் கனா கண்டனவே !
நிழல்கள் மறைய, கண்கள் நிறைய,
உன் நினைவுகள் சேர்த்து,
உன்னுடன் வாழ்ந்திடவே,
என் கண்கள் கனா கண்டனவே !
கைகள் இணைத்து, அருகில் இழுத்து,
என் மார்போடு உன்னை அனைத்து,
காலம் நின்றிடவே,
என் கண்கள் கனா கண்டனவே !
கனவுகளோ ஆயிரம்; ஆயினும்,
நான் காண்பது உன்னை மட்டுமே !
ஏக்கங்களோ ஆயிரம்; ஆயினும்,
நான் ஏங்குவது உனக்காக மட்டுமே !
வண்ணம் இல்லா என் கனாக்களுக்கு,
வர்ணம் பூசிட நீ இருப்பாயோ ?
இன்றும், என்றும் என்னுடன் வாழ்ந்திடவே,
வரம் ஒன்று நீ தருவாயோ ?
~ செல்வ குமார் ஆறுமுகபாண்டியன்